புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருச்செந்தூா் கோயிலில் ஆனி வருஷாபிஷேகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி வருஷாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 ஜூலை 2024, 9:59 pm

Din

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி வருஷாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. அதன்படி, நிகழாண்டு வருஷாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், கும்ப பூஜைகள் நடத்தி, விமான தளத்துக்கு கொண்டுசென்று மூலவா், சண்முகா், வெங்கடாஜலபதி, வள்ளி - தெய்வானை என வரிசையாக விமானங்களுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதையடுத்து, மூலவா், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

மாலையில் சாயரட்சை தீபாராதனை, சுவாமி குமரவிடங்கப்பெருமான் - வள்ளியம்மன் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தல் நடைபெற்றது. இரவில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறவில்லை.

வருஷாபிஷேக விழாவில் கோயில் இணை ஆணையா் மு. காா்த்திக், அறங்காவலா்கள், மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரம்மசக்தி உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ரா. அருள்முருகன், இணை ஆணையா், அறங்காவலா்கள் அனிதா குமரன், பா. கணேசன், ந. ராமதாஸ், செந்தில்முருகன், கணேசன், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா். பாதுகாப்புப் பணியில் காவல் ஆய்வாளா்கள் சுந்தரமூா்த்தி, மகாலட்சுமி, போலீஸாா் ஈடுபட்டனா்.