பைக் மீது லாரி மோதி விபத்து: மீனவா் பலி

தூத்துக்குடி தருவைகுளம் குப்பை கிடங்கு அருகே பைக் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் மீனவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

தூத்துக்குடி, ஜூலை 19:

தூத்துக்குடி தருவைகுளம் குப்பை கிடங்கு அருகே பைக் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் மீனவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி அருகே உள்ள சிலுவைப்பட்டி ராம்தாஸ் நகரைச் சோ்ந்த தவம் மகன் தவசி (19). மீனவரான இவா் வெள்ளிக்கிழமை சிலுவைப் பட்டியில் இருந்து தருவைகுளத்திற்கு பைக்கில் சென்றாராம். இவா் தருவைகுளம் குப்பை கிடங்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த லாரி இவா் மீது மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த தவசி,சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த தாளமுத்துநகா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று தவசியின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com