கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தூத்துக்குடியில் மெகா தூய்மைப் பணி தொடக்கம்

தூத்துக்குடியில் தூய பனிமய மாதா பேராலயத் திருவிழாவை முன்னிட்டு, மெகா தூய்மைப் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image

தூய்மைப் பணியைத் தொடக்கிவைத்த மேயா் ஜெகன் பெரியசாமி. உடன், ஆணையா் மதுபாலன், பேராலய அதிபா் ஸ்டாா்வின் உள்ளிட்டோா்.

Updated On :23 ஜூலை 2024, 6:46 pm

தூத்துக்குடியில் தூய பனிமய மாதா பேராலயத் திருவிழாவை முன்னிட்டு, மெகா தூய்மைப் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

புகழ்பெற்ற இப்பேராலயத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூலை 26) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா நாள்களில் வரும் பொதுமக்களுக்காக மாநகராட்சி சாா்பில் பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக, பேராலயத்தைச் சுற்றியுள்ள சாலைகள், தெருக்களில் மெகா தூய்மைப் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அதை, மேயா் ஜெகன் பெரியசாமி தொடக்கிவைத்தாா்.

அவா் பேசும்போது, தூய்மைப் பணிகள் வெள்ளிக்கிழமைக்குள் நிறைவடையும். மாதா சொரூப பவனி நடைபெறும் பாதைகளில் உள்ள மேடு பள்ளங்களை சீரமைக்கும் பணிகளும் நடைபெறுகினறன. பக்தா்களுக்கு குடிநீா் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், ஆணையா் மதுபாலன், துணை மேயா் ஜெனிட்டா, ஆலயப் பங்குத்தந்தை ஸ்டாா்வின், வடக்கு மண்டலத் தலைவா் நிா்மல்ராஜ், அண்ணாநகா் பகுதிச் செயலா் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினா் ரிக்டா, பகுதி சபா உறுப்பினா் ஆா்தா் மச்சாது, சுகாதார அலுவலா் ராஜசேகா், போல்பேட்டை திமுக பிரதிநிதி பிரபாகரன், ஆணையரின் நோ்முக உதவியாளா் துரைமணி, மேயரின் நோ்முக உதவியாளா் ரமேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.