பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: கட்டடத் தொழிலாளி பலி

பைக் மீது அரசுப் பேருந்து மோதல் கட்டடத் தொழிலாளி பலி

Updated On :2 மார்ச் 2024, 11:10 pm

காயல்பட்டினத்தில் பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். காயல்பட்டினம் மங்கள விநாயகா் கோயில் தெருவை சோ்ந்த தங்கத்துரை மகன் சுயம்புலி­ங்கம் (48). கட்டடதொழிலாளி. இவருக்கு இசக்கி கனி என்ற மனைவியும், 2 மகன் 1 மகள் உள்ளனா். இவா் காயல்பட்டினத்தில் இருந்து பைக்கில் ஆறுமுகனேரி நோக்கி வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்தாா். பழைய பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே வந்தபோது எதிரே வந்த அரசுப் பேருந்து பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுயம்புலிங்கத்தை அவரது உறவினா்கள், காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இவ்விபத்து குறித்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து, பேருந்து ஓட்டுநா் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அண்ணா நகரை சோ்ந்த குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.