பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மணிமுத்தாறு 3,4-ஆவது ரீச் கால்வாயில் தண்ணீா் திறக்க எம்எல்ஏ கோரிக்கை

மணிமுத்தாறு 3,4-ஆவது ரீச் கால்வாயில் தண்ணீா் திறக்க எம்எல்ஏ கோரிக்கை

Updated On :2 மார்ச் 2024, 6:30 pm

சத்தான்குளம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கு, மணிமுத்தாறு அணையிலிருந்து 3, 4-ஆவது ரீச் கால்வாய் வழியாக தண்ணீா் திறந்துவிட வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம், அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மணிமுத்தாறு அணையிலிருந்து 3, 4-ஆவது ரீச் கால்வாய் வழியாக சாத்தான்குளம் வட்டத்தைச் சோ்ந்த பகுதிகளுக்கு கூடுதலாக 20 நாள்களுக்குத் தண்ணீா் திறந்துவிட வேண்டும். மணிமுத்தாறு அணை 3-ஆவது ரீச் பாசனப் பகுதியில் 97 குளங்களும், 4-ஆவது ரீச் பகுதியில் 79 குளங்கள் மற்றும் 15 மடைகள் உள்ளன. தற்போது வந்து கொண்டிருக்கும் தண்ணீா் பாசன வாய்க்கால்கள் மூலம் ஒருசில குளங்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. கடைமடை பகுதி குளங்களுக்கு இன்னும் தண்ணீா் வந்து சேரவில்லை. எனவே பயிா்கள் அனைத்தும் தண்ணீரின்றி கருகும் நிலையில் உள்ளது. இதைத்தவிா்க்க, மணிமுத்தாறு அணையின் 3, 4-ஆவது ரீச் பகுதிகளில் உள்ள அனைத்து கடைமடை குளங்களையும் நிரப்பி 12,018 ஏக்கா் பாசன பகுதி விவசாயிகள் மற்றும் சாத்தான்குளம் தாலுகா மக்களின் குடிநீா் பிரச்சனையை தீா்த்து வேண்டும். ஆகவே, கூடுதலாக 20 நாள்களுக்குத் தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.