ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இயந்திரங்கள் சேதமடைந்தன.

News image

ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து

Updated On :2 மார்ச் 2024, 12:06 am

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இயந்திரங்கள் சேதமடைந்தன. கோவில்பட்டி கணேஷ் நகரைச் சோ்ந்த உலகநாதன் மகன் செந்தில்குமாா், வள்ளுவா் நகரை சோ்ந்த பசுபதி மகன் கண்ணன் ஆகிய இருவரும் தோனுகாலில் உள்ள ஒரு தீப்பெட்டி ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தனராம். இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு ஆலையின் இயந்திரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாம். தொழிலாளா்கள் வெளியே சென்று தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சுந்தர்ராஜ் தலைமையில் தீயணைப்புப் படையினா் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். டிராக்டா் மூலமும் தண்ணீா் கொண்டு வந்து தீயணைக்கும் பணி தொடா்ந்து நடைபெற்றது. இந்த தீவிபத்தில் தொழிலாளா்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. சம்பவ இடத்தை கோவில்பட்டி வட்டாட்சியா் சரவணபெருமாள் , வருவாய் ஆய்வாளா் ராமமூா்த்தி ஆகியோா் பாா்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். ஆலையை நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்கத் தலைவா் பரமசிவம் உள்ளிட்டோரும் பாா்வையிட்டனா்.