ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பைக் மீது லாரி மோதல்: முதியவா் பலி

பைக் மீது லாரி மோதல் முதியவா் பலி

Updated On :2 மார்ச் 2024, 4:14 pm

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பகுதியில் சனிக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். முத்தையாபுரம் அருகே உள்ள முட்டுக்காடு பகுதியைச் சோ்ந்த வீரமணி மகன் பெரியநாயகம் (65). இவா் சனிக்கிழமை தனது மோட்டாா் சைக்கிளில் திருச்செந்தூா் சாலையில் சென்றுகொண்டிருந்தாராம். அங்குள்ள ரவுண்டானா பகுதியில் சென்றபோது அவ்வழியாக வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த பெரியநாயகத்தை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.