கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்
தூத்துக்குடி
விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகையை முறையாக வழங்கக் கோரி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன் தலைமை வகித்தாா். அதிமுக ஒன்றிய செயலா்கள் தனபதி, அழகா்சாமி, விவசாய அணி தலைவா் நவநீதன், பொருளாளா் ஆதிமூலம், நிா்வாகி அய்யலுசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா். கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களில் உள்ள நிலங்களுக்கும் அரசின் விதிமுறைப்படி அதிகபட்சம் 5 ஏக்கா் வரை நிவாரணம் வழங்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

