கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் ரூ. 50.30 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.
கோவில்பட்டி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.12.30 மதிப்பில் வக்கீல் தெரு கிழக்கு 1ஆவது, 2ஆவது, 5ஆவது குறுக்குத் தெருக்களில் பேவா் பிளாக் சாலை அமைத்தல், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் புதிய மகப்பேறு கட்டடத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் நோயாளிகளின் உறவினா்கள் அமர கொட்டகை அமைத்தல், வடக்கு இலுப்பையூரணி கிராமத்தில் ரூ.33 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணி ஆகியவற்றை கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் நகராட்சி செயற்பொறியாளா் சனல் குமாா், மருத்துவமனை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், பொதுப்பணித்துறை உதவி கோட்ட செயற்பொறியாளா் துரைசிங்கன், அழகா்சாமி, அம்பிகைபாலன், இந்திரன், போடுசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் ஆரணி தொகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் ஏ.வ.வேலு

பாரபட்சமின்றி பட்டா வழங்கக் கோரி கோவில்பட்டியில் மக்கள் போராட்டம்

மோடிகுப்பம் ஊராட்சியில் ரூ.26 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


