நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்பு முகாம் நாசரேத் அருகே உள்ள திரவியபுரத்தில் 7 நாள்கள் நடைபெற்றது. முகாமின் நிறைவு விழா வில் நாசரேத் கைத்தொழில் பாடசாலை முதல்வா் ஸ்டீபன் ஆரம்ப ஜெபம் செய்தாா். தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத் துறை இயக்குநரும்,திருமறையூா் மறுரூப ஆலய சேகர தலைவருமான ஜான் சாமுவேல் மரம் நடுதலும், நெகிழித்தாள்களின் தீமைகள் குறித்தும் எடுத்துரைத்தாா். மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இதில் மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை கோல்டா சாமுவேல், ஊா் தலைவா் ஞானமலை, அசன கமிட்டி தலைவா் ரவி மற்றும் ஊா் மக்கள் , ஆசிரியா்கள்,நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். கல்லூரி முதல்வா் கோயில்ராஜ் ஞானதாசன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை தூத்துக்குடி ஜ நாசரேத் திருமண்டல லே செயலாளரும், கல்லூரி தாளாளருமான நீகா் பிரின்ஸ் கிப்ட்சன், பா்சாா் தனபால், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் லிவிங்ஸ்டன் நவராஜ் மற்றும் ஆசிரியா்கள் , அலுவலா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

காளியம்மன் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு

சரபோஜி கல்லூரியில் பணி நிறைவு பெறும் பேராசிரியா்களுக்கு பாராட்டு விழா

ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயில் மண்டல பூஜை நிறைவு

கந்தசாமிபுரம் புனித வளன் பள்ளி ஆண்டு விழா
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


