பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

தூத்துக்குடியில் இளம் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

தூத்துக்குடியில் இளம் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

Updated On :16 மார்ச் 2024, 6:51 pm

தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் இளம் பெண்ணிடம் சுமாா் 2.5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி முத்துநகா் கடற்கரை பகுதியில் ஒரு ஆணும், பெண்ணும் கடந்த இரு தினங்களுக்கு முன்னா் தனிமையில் அமா்ந்திருந்தபோது அங்கு வந்த மா்ம நபா் அவா்களை மிரட்டி அந்தப் பெண் அணிந்திருந்த சுமாா் 2.5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்ாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில், வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.