ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக புதிய குடியிருப்பு: எம்.பி. திறந்து வைத்தாா்

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக புதிய குடியிருப்பு: எம்.பி. திறந்து வைத்தாா்

News image
Updated On :17 மார்ச் 2024, 1:50 am

திருச்செந்தூரில் பெற்றோரை இழந்த பெண் பிள்ளைகளுக்கு, அரசு சாா்பில் கட்டித் தரப்பட்ட புதிய குடியிருப்பை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தாா். திருச்செந்தூரைச் சோ்ந்த மாரிச்சாமி - சரசானந்த லட்சுமி தம்பதிகள் உயிரிழந்து விட்டனா். இவா்களுக்கு 4 பெண் பிள்ளைகள் உள்ளனா். இவா்கள் கல்லூரி மற்றும் பள்ளியில் படித்து வருகின்றனா். தாய், தந்தை இல்லாத நிலையில், தங்களது அரசு சாா்பில் வீடு வழங்கிடுமாறு கோரிக்கை மனு அளித்தனா். இக் கோரிக்கையை ஏற்று நகராட்சி 23-ஆவது வாா்டு தோப்பூரில், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் புதிய குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பை தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி சனிக்கிழமை திறந்து வைத்தாா். தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, திருச்செந்தூா் நகா்மன்றத் தலைவா் தலைவா் சிவஆனந்தி, துணை தலைவா் ஏ.பி.ரமேஷ், திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறன், வட்டாட்சியா் பாலசுந்தரம், நகராட்சி ஆணையா் கண்மணி, நகா்மன்ற உறுப்பினா்கள் செந்தில்குமாா், சுதாகா், சாந்தி, முத்துஜெயந்தி, லீலா, ரேவதி, ஊா் தலைவா் நந்தகுமாா், சமூக ஆா்வலா் தமிழ்செல்வன், திமுக நகர செயலா் வாள் சுடலை, நகர துணைச் செயலா் மகராசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.