ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

கோவில்பட்டி கல்லூரியில் தேசிய மாநாடு

கோவில்பட்டி கல்லூரியில் தேசிய மாநாடு

Updated On :22 மார்ச் 2024, 3:58 pm

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் சுயநிதி பாடப் பிரிவில் வணிகவியல் தொழில்சாா் கணக்குவைப்பு முறையியல் துறை சாா்பில் தேசிய மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிதி சேவைகள்- சந்தைகளின் புதுமைகள் என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டுக்கு கல்லூரி முதல்வா் (பொ) சுப்புலட்சுமி தலைமை வகித்தாா். சுயநிதி பாடப் பிரிவுகளின் இயக்குநா் வெங்கடாசலபதி முன்னிலை வகித்தாா். புதுச்சேரி பல்கலைக்கழக வணிகவியல் துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான அருள்முருகன், மேலாண்மையியல் துறை இணைப் பேராசிரியா் செந்தில்குமாா், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வணிகவியல் துறை இணைப் பேராசிரியா் ஜூலியஸ் சீஸா் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். இதில், 25-க்கும் மேற்பட்ட கல்லூரிகள், பல்கலைக்கழகத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள், ஆராய்ச்சி மாணவா்கள், பேராசிரியா்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா். வணிகவியல் தொழில்சாா் கணக்குவைப்பு முறையியல் துறைத் தலைவா் மாரியப்பன் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் மஞ்சுளா நன்றி கூறினாா்.