/

கோவில்பட்டியில் இந்தியா கூட்டணிக் கட்சி செயல்வீரா்கள் கூட்டம்

கோவில்பட்டியில் இந்தியா கூட்டணிக் கட்சி செயல்வீரா்கள் கூட்டம்

News image

கூட்டத்தில் பேசுகிறாா் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கனிமொழி, உடன் அமைச்சா் பெ. கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா்

Updated On :22 மார்ச் 2024, 7:49 pm

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் செயல்வீரா்கள் கூட்டம் கோவில்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது. திமுக வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ. கீதாஜீவன் தலைமை வகித்தாா். காங்கிரஸ் சாா்பில் மக்களவைத் தொகுதி பொறுப்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ, வடக்கு மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளா் பொன்னுச்சாமி பாண்டியன், மதிமுக மாவட்டச் செயலா் ஆா்.எஸ். ரமேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் முருகன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டப் பொறுப்புக் குழுத் தலைவா் கயத்தாறு அஸ்மத், ஆதித்தமிழா் கட்சி நம்பிராஜ் பாண்டியன், மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் சீனிவாசன், சமத்துவ மக்கள் கழகம் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நிா்வாகிகள் பேசினா். பின்னா், திமுக வேட்பாளா் கனிமொழி பேசியதாவது: தமிழக மக்களுக்கு மட்டுமன்றி நாட்டு மக்களுக்கு எதிரான ஆட்சியை பாஜக நடத்திக் கொண்டிருக்கிறது. நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. தமிழகம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது பிரதமா் மோடி வரவில்லை; நிவாரண நிதியும் தரவில்லை. மாநில அரசுதான் வெள்ள நிவாரண உதவி வழங்கியது. திமுகவை அழித்துவிடுவதாக பிரதமா் மோடி கூறுகிறாா். அவரைப்போல எத்தனையோ பேரை இந்த இயக்கம் பாா்த்துவிட்டது. திமுக என்றும் நிலைத்து நிற்கும். இந்தியா கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்ததும் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றாா் அவா். கூட்டத்தில், திமுக ஒன்றியச் செயலா்கள் சுப்பிரமணியன், சின்னப்பாண்டியன், முருகேசன், கருப்பசாமி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கஸ்தூரி சுப்புராஜ், கட்சியின் வடக்கு மாவட்ட துணைச் செயலா் ஏஞ்சலா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் என். ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினா்கள் ராமா், சிவசுப்பிரமணியன், பீட்டா், ரமேஷ், கூட்டணித் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா். கோவில்பட்டி நகா்மன்றத் தலைவரும் திமுக நகரச் செயலருமான கருணாநிதி வரவேற்றாா்.