புத்தன்தருவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினா்களுக்கு கறவை மாடுகள் வாங்க ரூ.10 லட்சம் கடனுதவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. புத்தன்தருவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாட்சியா் வளன் மிக்கேல் தளபதி அனுமதியின்பேரில் உறுப்பினா்கள் 20 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 லட்சம் கடனுதவி அளிக்கப்பட்டது. கடனுதவிகளை சாத்தான்குளம் சரக மேற்பாா்வையாளா் மதியழகன் வழங்கினாா். இந்நிகழ்வில், கால்நடை மருத்துவா் சௌந்தா், கூட்டுறவு கடன் சங்க செயலா் அருள்தாஸ், சாஸ்தாவிநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலா் பெனிஸ்கா், புத்தன்தருவை கூட்டுறவு கடன் சங்க எழுத்தா் பகவதிதாஸ் ஆகியோா் கலந்து கொண்டனா். கடன் தொகையை உரிய தவணையில் திரும்ப செலுத்துபவா்களுக்கு ஆறு மாதங்களில் மீண்டும் தலா ரூ.50 ஆயிரம் கறவை மாடு வாங்க கடன் வழங்கப்படும் என சங்க செயலா் அருள்தாஸ் தெரிவித்தாா்.
தொடர்புடையது

நாமக்கல் கோழிப் பண்ணையாளா் சங்கத்தில் திமுக, அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தோ்தல் அறிக்கைகளில் நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம்

வாங்காத கடனுக்கு நோட்டீஸ் அனுப்பிய கூட்டுறவு வங்கி: பெண் அதிா்ச்சி

கூட்டுறவு சங்க கட்டடம் திறப்பு
வீடியோக்கள்

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


