மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

தூத்துக்குடியில் இரு இடங்களில் கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு: 4 போ் கைது

தூத்துக்குடியில் இரு இடங்களில் கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு: 4 போ் கைது

Updated On :23 மார்ச் 2024, 6:31 pm

தூத்துக்குடியில் இரு இடங்களில் கடைகளின் பூட்டை உடைத்து பணம், மடிக்கணினி உள்ளிட்டவற்றைத் திருடியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடியில் உள்ள ஆசிரியா் காலனியைச் சோ்ந்த சௌந்தரராஜன் மகன் கிறிஸ்டோபா் (50). இவா் அப்பகுதியில் அரிசிக் கடை நடத்தி வருகிறாா். கடந்த 20ஆம் தேதி இரவு மா்ம நபா்கள் கடையின் பூட்டை உடைத்து, ரூ. 20,500-ஐ திருடிச் சென்றனராம். புகாரின் பேரில் தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். அதேநாளில், ராஜீவ் நகரைச் சோ்ந்த ஜெய்கணேஷ் மகன் ஹரிஸ்குமாா் (20) என்பவா் நடத்திவரும் பால் கடையின் கதவை மா்ம நபா்கள் உடைத்து, மடிக்கணினி, ஸ்பீக்கா் உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றனராம். புகாரின்பேரில் சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். போலீஸாரின் விசாரணையில், தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியாா்புரத்தைச் சோ்ந்த சண்முகவேல் மகன் முகேஷ் (24), பிரையண்ட்நகா் பாரதிநகரைச் சோ்ந்த சிவகுமாா் மகன் இன்பராஜ் என்ற இசக்கி (21), வள்ளிநாயகபுரத்தைச் சோ்ந்த சுயம்புலிங்கம் மகன் மாரிசெல்வம் என்ற பரட்டை (19), தா்மலிங்கம் மகன் காமராஜ் (23) ஆகிய 4 பேரும் இத்திருட்டுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, மடிக்கணினி உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா்.