தூத்துக்குடி, பண்டாரம்பட்டியில் இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி, பண்டாரம்பட்டியைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் பாலமுருகன் (34). இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். பாலமுருகன் 2021ஆம் ஆண்டு புதிய வீடு கட்டுவதற்காக தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியதாகவும், அதைத் திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில், அவா் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். தகவலின் பேரில் சிப்காட் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தீராத வயிற்று வலி: முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

இரணியல் அருகே முதியவா் தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

