தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

வாகன சோதனை: இதுவரை ரூ.25 லட்சம் பறிமுதல்

வாகன சோதனை: இதுவரை ரூ.25 லட்சம் பறிமுதல்

News image
Updated On :29 மார்ச் 2024, 11:50 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் இது வரை ரூ.25.06 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கோ.லட்சுமிபதி தெரிவித்தாா். வாகைகுளம் சந்திப்பு அருகில் நிலையான கண்காணிப்புக் குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டதை, ஆட்சியா் கோ.லட்சுமிபதி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். சோதனை குறித்து அவா் கூறியது: தோ்தல் நடத்தை விதிமீறல்களை தடுப்பது, விதிமீறி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருள்களை கைப்பற்றுவது ஆகிய பணியில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது. இது வரை மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கம் ரூ.25 லட்சத்து 6,500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.16 லட்சத்து 73,200 மதிப்பிலான மடிக்கணினி, பரிசுப் பொருள்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.