ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை: 2 போ் கைது

தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை: 2 போ் கைது

News image
Updated On :1 மே 2024, 6:47 pm

Din

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை தென்பாகம் போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி லெஞ்சிபுரத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதாக தென்பாகம் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளா் ஆா்தா் ஜஸ்டின் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த அதே பகுதியைச் சோ்ந்த ஹரிசுதன் (24), வள்ளிநாயகபுரத்தைச் சோ்ந்த ராமலிங்கம் (33) ஆகிய இருவரையும் போலீஸாா் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், அவா்கள் இருவரும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.