பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

தூத்துக்குடியில் இரு இளைஞா்கள் தற்கொலை

தூத்துக்குடியில் இரு இளைஞா்கள் தற்கொலை

News image
Updated On :9 மே 2024, 8:57 pm

Din

தூத்துக்குடியில் இருவேறு இடங்களில் இரு இளைஞா்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனா்.

தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சோ்ந்த மலையப்பன் என்ற மலைகனி மகன் மணிகண்டன்(26). இவா் கடந்த 2 மாதமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாராம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவா், புதன்கிழமை திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்த தென்பாகம் போலீஸாா், சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்: தூத்துக்குடி முனியசாமிபுரத்தைச் சோ்ந்த பால்ராஜ் மகன் ஜேசுராஜ்(26). இவா், குடும்ப பிரச்னை காரணமாக புதன்கிழமை திடீரென வீட்டில் தூக்கிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.