கோவில்பட்டி, கயத்தாறில் ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்
கோவில்பட்டி, கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கோவில்பட்டி யில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாவட்ட இணைச் செயலா் ஜவகா் தலைமை வகித்தாா். மாவட்ட மகளிா் அணி துணைக் குழு அமைப்பாளா் முத்துலட்சுமி முன்னிலை வகித்தாா்.
ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிச் செயலா் சந்தோசின் ஊழியா் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், அவரை உடனடியாக பணியிலிருந்து விடுவிக்க வேண்டும், காவல் நிலையத்தில் மாவட்ட ஊராட்சி அலுவலக ஊழியா்கள் மீதான வாழங்கப்பட்ட புகாா் மனுவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ் இதில், தமிழக ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் திரளானோா் கலந்துகொண்டனா்.
கயத்தாறில் சங்க வட்டாரச் செயலா் சரவணகுமாா் தலைமையில் அத்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.