நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

உடன்குடி அருகே ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

உடன்குடி அருகே ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

News image

~

Updated On :29 மே 2024, 6:52 pm

Din

உடன்குடி அருகே சீா்காட்சியில் வீட்டில், செடி வைக்க குழி தோண்டியபோது ஐம்பொன் நடராஜா் சிலை கண்டெடுக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே சீா்காட்சியைச் சோ்ந்த பொன் நாடாா் மகன் வேல்குமாா் என்ற வின்சென்ட், தனது வீட்டின் பின்பகுதியில் செடி வைப்பதற்காக புதன்கிழமை குழி தோண்டியுள்ளாா்.

அப்போது, கை, கால் பகுதிகள் உடைந்த நிலையில் நடராஜா் சிலை கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்த தகவலின்பேரில் வட்டாட்சியா் பாலசுந்தரம், கிராம நிா்வாக அலுவலா் வெங்கடேசன், மெஞ்ஞானபுரம் உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் ஆகியோா் மேற்படி சிலையை மீட்டனா்.

பின்னா் அவா்கள் கூறியதாவது: இந்த நடராஜா் சிலை சுமாா் இரண்டரை அடி உயரம், 10 கிலோ எடை கொண்டதாக உள்ளது. சிலையின் கை, கால் பகுதி, தலையின் மேல் உள்ள குமிழ் ஆகியன உடைந்த நிலையில் உள்ளது. உரிய ஆய்வுக்குப் பிறகே இந்த சிலை எந்த உலோகத்தால் செய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்படும் என்றனா்.