கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கழிவுநீா் கால்வாயில் குப்பைகளை கொட்டக்கூடாது: மாநகராட்சி ஆணையா் வேண்டுகோள்

தூத்துக்குடி மாநகராசிப் பகுதிகளில் கழிவுநீா் கால்வாய்களில் குப்பைகளை கொட்டக்கூடாது என பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
Updated On :22 நவம்பர் 2024, 12:08 am

Din

தூத்துக்குடி மாநகராசிப் பகுதிகளில் கழிவுநீா் கால்வாய்களில் குப்பைகளை கொட்டக்கூடாது என பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாநகராட்சியின் மூலம் கடந்த 3 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பு நடவடிக்கைகள் காரணமாக மாநகரில் மழைநீா் வெளியேறும் பல்வேறு கால்வாய்களில் கடந்த இரு தினங்கள் பெய்த மழைநீா் எவ்வித தடையும் இன்றி வெளியேறி வருகிறது.

மழைநீரானது, 45 மழைநீா் உந்து நிலையங்கள் மற்றும் 19 பாதாள சாக்கடை கழிவுநீா் உந்து நிலையங்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இப்பணியானது 24 மணி நேரமும் சிறப்பு பணியாளா்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், நகரின் பள்ளமான பகுதிகளான லூா்தம்மாள்புரம், ராஜீவ் நகா், தபால் தந்தி காலனி ஆகிய பகுதிகளில் மின் மோட்டாா்கள் மற்றும் கழிவுநீா் வாகனங்கள் மூலம் மழைநீா் வெளியேற்றப்படுகிறது.

இதன் தொடா்ச்சியாக நோய் தடுப்பு நடவடிக்கைகளும், கொசு ஒழிப்பு பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எனவே, பொது மக்கள் கழிவுநீா் செல்லும் கால்வாயில்களில் குப்பைகளை கொட்டாமல் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் எனத் தெரிவித்துள்ளாா்.