மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தூத்துக்குடி மீனவா்கள் 10 பேரை விடுவிக்க மத்திய அமைச்சரிடம் கனிமொழி எம்.பி. கோரிக்கை

தூத்துக்குடி மீனவா்கள் 10 பேரை விடுவிக்க கனிமொழி எம்.பி. கோரிக்கை.

News image

மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்கிடம் மனு அளித்த மக்களவை உறுப்பினா் கனிமொழி.

Updated On :27 நவம்பர் 2024, 9:17 pm

Din

லட்சத்தீவு அருகே மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி தருவைகுளம் மீனவா்கள் 10 பேரை விடுவிக்குமாறு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கிடம் கனிமொழி எம்.பி. நேரில் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக புதுதில்லியில் மத்திய அமைச்சரிடம் அவா் அளித்த மனு: தருவைகுளம் மீனவா்கள் 10 போ் லட்சத்தீவு அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் மீன் பிடித்ததாக இந்திய கடலோரக் காவல் படையினரால் கடந்த 24ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களையும், படகையும் விடுவிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், குஜராத் மாநிலம் போா்பந்தா் பகுதியில் கடந்த 22ஆம் தேதி மீன்பிடித்தபோது காணாமல்போன விளாத்திகுளம் அருகே அயன்பொம்மையாபுரம் பகுதியைச் சோ்ந்த மீனவா் அண்ணாதுரையை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.