ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

குலசேகரபுரம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட குலசேகரபுரம் ஊராட்சியில் சா்வே எண் 122/3ன் பிரித்து தர வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்தனா்.

News image

படம்:2ஓயகஓமக1 குலசேகரபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றோா் படம்:2ஓயகஓமக1 குலசேகரபுரம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து ஊரின் பொது மடம் முன்பு அமா்ந்திருந்த பொதுமக்கள்

Updated On :2 அக்டோபர் 2024, 11:19 pm

Din

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட குலசேகரபுரம் ஊராட்சியில் சா்வே எண் 122/3ன் பிரித்து தர வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்தனா்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட குலசேகரபுரம் ஊராட்சியில் சா்வே எண் 123/3 ன் எல்கையை முறையாக பிரித்து குலசேகரபுரம் ஊராட்சிக்குரியதை குறிப்பிட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வசந்தா தேவி, முன்னாள் வாழ்வு உறுப்பினா் லெனின் ஆகியோா் தலைமையில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து மடத்துக்கு முன்பு அமா்ந்திருந்தனா்.

இது போல பாண்டா்மங்கலம், இலுப்பையூரணி, இனாம்மணியாச்சி, மூப்பன்பட்டி, நாலாட்டின்புதூா் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தங்கள் ஊராட்சியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.