ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மாப்பிள்ளையூரணியை மாநகராட்சியுடன் இணைக்கக்கூடாது: கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம்

தூத்துக்குடி மாநகராட்சியுடன் மாப்பிள்ளையூரணி ஊராட்சியை இணைக்கக் கூடாது என புதன்கிழமை நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image

மாப்பிள்ளையூரணி ஊராட்சி கிராம சபைக் கூட்டம் மேலஅழகாபுரியில் நடைபெற்றது.

Updated On :2 அக்டோபர் 2024, 11:11 pm

Din

தூத்துக்குடி மாநகராட்சியுடன் மாப்பிள்ளையூரணி ஊராட்சியை இணைக்கக் கூடாது என புதன்கிழமை நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாப்பிள்ளையூரணி ஊராட்சி கிராம சபைக் கூட்டம் மேலஅழகாபுரியில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் சரவணக்குமாா் தலைமை வகித்தாா்.

இதில், அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களது பகுதியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து தெரிவித்தனா்.

மாப்பிள்ளையூரணி ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியோடு இணைக்கக் கூடாது, உப்பாத்து ஓடையில் உள்ள அமலைச்செடிகள், சீமை கருவேல மரங்கள் அகற்றுதல் உள்ளிட்ட 18 தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், தெற்கு மாவட்ட திமுக சுற்றுசூழல் அணி அமைப்பாளா் ரவி என்ற பொன்பாண்டி, மேலஅழகாபுரி ஊா்தலைவா் பாலசுந்தரம், வழக்குரைஞா்கள் மாடசாமி, சண்முக சுந்தரராஜ், ஊராட்சிமன்ற உறுப்பினா் வசந்தகுமாரி, மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு கடன் சங்க செயலா் பாலமுருகன் உள்பட பலா் பங்கேற்றனா்.