மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மதுவை பதுக்கி விற்றதாக இருவா் கைது

சாத்தான்குளம் பகுதியில் இரு இடங்களில் மதுவை பதுக்கி வைத்து விற்றதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :4 அக்டோபர் 2024, 1:05 am

Din

சாத்தான்குளம் பகுதியில் இரு இடங்களில் மதுவை பதுக்கி வைத்து விற்றதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சாத்தான்குளம் காவல் நிலைய பகுதியில் மதுவை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி ஆய்வாளா்கள் சுரேஷ்குமாா், எட்வின் அருள்ராஜ் ஆகியோா் தனித்தனியாக புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுப்பட்டனா். கலுங்குவிளை காலனி அருகில் சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை போலீஸாா் பிடித்து விசாரித்ததில், அவா் கலுங்குவிளை கீழத்தெருவைச் சோ்ந்த லூக்காஸ் (55) என தெரியவந்தது. அவரிடமிருந்து 15 மதுபாட்டில்கள், ரூ.2110 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் சவேரியாா்புரம் விலக்கில் சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரித்ததில், அவா் சமத்துவபுரம் வடக்குத்தெருவைச் சோ்ந்த தேவேந்திரன் மகன் மாயாண்டி (30) என தெரியவந்தது. அவரிடமிருந்து 14 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்து காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனா்.