மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மின்சாரம் பாய்ந்து பக்தா் பலி

தூத்துக்குடி நேதாஜி நகரில் மின்சாரம் பாய்ந்து குலசேகரன்பட்டினம் தசரா பக்தா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 7:42 pm

Din

தூத்துக்குடி நேதாஜி நகரில் மின்சாரம் பாய்ந்து குலசேகரன்பட்டினம் தசரா பக்தா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி நேதாஜி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் அருணாச்சலம் (23). இவா் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவுக்காக மாலை அணிந்திருந்தாராம். இந்நிலையில், அதே பகுதியில் தசரா குழுவினா் செட் அமைத்துள்ளனா்.

இங்கு உள்ள மின் விளக்கு, ஒலிபெருக்கி ஆகியவற்றுக்கான வயா்கள் ஆங்காங்கே கிடந்துள்ளன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அருணாச்சலம், மைக் போடுவதற்காகச் சென்றாரம். அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.