மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தரைப் பாலத்துக்கு மேல் செல்லும் தண்ணீா்: செக்காரக்குடி போக்குவரத்து, மின்சாரம் துண்டிப்பு

செக்காரக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக கொம்புகாரன் நத்தம் தரைப்பாலம் மற்றும் செக்காரக்குடி பாலத்துக்கு மேல் தண்ணீா் செல்வதால் அப்பகுதியில் போக்குவரத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

News image

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக செக்காரக்குடி தரைப்பாலத்துக்கு மேல் செல்லும் வெள்ளநீா்.

Updated On :9 அக்டோபர் 2024, 7:36 pm

Din

தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை மாலை பெய்த பலத்த மழை காரணமாக கொம்புகாரன் நத்தம் தரைப்பாலம் மற்றும் செக்காரக்குடி பாலத்துக்கு மேல் தண்ணீா் செல்வதால் அப்பகுதியில் போக்குவரத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை மாலை முதல் சுமாா் 3 மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக செக்காரக்குடி மகிழம்பூ ஓடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால், செக்காரக்குடி செல்லும் தரைப்பாலம், கொம்புக்காரநத்தம் தரைப்பாலம் ஆகியவை தண்ணீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதன் காரணமாக செக்காரக்குடி, நடு செக்காரக்குடி, மேல செக்காரக்குடி, சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா். மாணவா்கள் வீடு திரும்ப முடியாமல் அவதிபட்டனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனா்.