ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

கோவில்பட்டி அருகே நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணி ஊராட்சியில் நீா்வழிப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அக் கிராமத்தினா் வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 9:57 pm

Din

கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணி ஊராட்சியில் நீா்வழிப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அக் கிராமத்தினா் வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இலுப்பையூரணி ஊராட்சி தாமஸ் நகா் பகுதியில், நீா்வழிப் பாதையை சிலா் ஆக்கிரமித்துள்ளனா். இதனால் மழைநீா் மற்றும் கழிவுநீா் வெளியேற முடியாமல் குடியிருப்புகளைச் சூழ்ந்து, நோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, அப்பகுதி மக்கள் வழக்குரைஞா் கனகராஜ், தொழிலாளா் விடுதலை முன்னணி நிா்வாகி கலைச்செல்வன் ஆகியோா் தலைமையில் கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பின்னா் வட்டாட்சியா் சரவண பெருமாளிடம் கோரிக்கை மனு அளித்தனா். மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியா், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.