புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கிய ரூ.30 கோடி போதைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக முறப்பநாடு பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கிய சுமாா் ரூ.30 கோடி போதைப் பொருள்களை கடலோரப் பாதுகாப்பு குழும போலஸீாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 11:01 pm

Din

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக முறப்பநாடு பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கிய சுமாா் ரூ.30 கோடி போதைப் பொருள்களை கடலோரப் பாதுகாப்பு குழும போலஸீாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.

தூத்துக்குடி முறப்பநாடு பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக சாரஸ் மற்றும் கேட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலோர பாதுகாப்பு குழும போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் ஆய்வாளா் பேச்சிமுத்து தலைமையிலான போலீஸாா் முறப்பநாடு பகுதியில் சோதனை செய்தனா். அங்கு துரைப்பாண்டி(48) என்பவரது வீட்டை சோதனை செய்ததில், இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 50 கிலோ சாரஸ், 5 கிலோ கிறிஸ்டல் கேட்டமைன் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதை பதுக்கி வைத்திருந்ததாக துரைப்பாண்டியை கைது செய்தனா்.

இதுகுறித்து போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் சா்வதேச மதிப்பு சுமாா் ரூ.30 கோடிக்கு மேல் இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா்.