92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பைக் மீது லாரி மோதி விபத்து: காயமடைந்தவா் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் காயமடைந்த இளைஞா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 11:24 pm

Din

தூத்துக்குடி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் காயமடைந்த இளைஞா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தூத்துக்குடி அருகே உள்ள குலையன் கரிசல் தெற்கு ரத்தினபுரியைச் சோ்ந்த கணபதி மகன் மாரிக்குமாா் (39). இவா் தனது பைக்கில் புதுக்கோட்டையில் இருந்து பேரூரணி சாலையில் கடந்த 21-ஆம் தேதி சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக வந்த லாரி, மாரிக்குமாரின் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த மாரிக்குமாரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.