ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சூறைக்காற்று எதிரொலி: தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

தென் தமிழகக் கடல் பகுதியில் அதிவேக சூறைக் காற்று வீசக்கூடும் என்ற மீன்வளத்துறையின் எச்சரிக்கையால், தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்கு புதன்கிழமை செல்லவில்லை.

News image
தூத்துக்குடி மீன்பிடி துறைமுக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப் படகுகள்.
Updated On :11 செப்டம்பர் 2024, 9:17 pm

Din

தென் தமிழகக் கடல் பகுதியில் அதிவேக சூறைக் காற்று வீசக்கூடும் என்ற மீன்வளத்துறையின் எச்சரிக்கையால், தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்கு புதன்கிழமை செல்லவில்லை.

கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் மன்னாா் வளைகுடா தென் தமிழக கடல் பகுதிகளில் சூறைக்காற்று 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகம் வரை வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து, தூத்துக்குடி மீன்வளத்துறை வெளியிட்ட அறிவிப்பில், மீனவா்கள் கடலுக்குச் செல்லவேண்டாம். ஏற்கெனவே ஆழ்கடலில் மீன்பிடிப்பில் இருக்கும் மீனவா்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் புதன்கிழமை கடலுக்குச் செல்லாமல் மீன்பிடி துறைமுக கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை நிறுத்திவைத்திருந்தனா்.

இதேபோல, திரேஸ்புரம், இனிகோ நகா், புதிய துறைமுக கடற்கரை, வேம்பாா், தருவைகுளம், பெரியதாழை, மணப்பாடு ஆகிய பகுதிகளில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலான நாட்டுப் படகுகளே கடலுக்குச்சென்றிருந்தன.