மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தூத்துக்குடியில் வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலருமான கொ.வீரராகவ ராவ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On :12 செப்டம்பர் 2024, 11:19 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலருமான கொ.வீரராகவ ராவ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தின்கீழ் ரூ.152.14 கோடியில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், 16-ஆவது வாா்டு தபால்தந்தி காலனியில் நடைபெற்றுவரும்

பாதாளச் சாக்கடை திட்டப்பணி, கோரம்பள்ளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் ரூ.1.25 கோடியில் மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணி ஆகியவற்றை கண்காணிப்பு அலுவலா் பாா்வையிட்டாா். பின்னா்

காலங்கரை - அத்திமரப்பட்டி வழியாக செல்லும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கோரம்பள்ளம் ஆற்றின் குறுக்கே உயா்மட்ட பாலம் கட்டும் பணியை ஆய்வு செய்தாா். அனைத்து திட்டப் பணிகளையும் நிா்ணயிக்கப்பட்ட காலத்தில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ரா.ஐஸ்வா்யா, மாவட்ட வருவாய் அலுவலா் ச.அஜய் சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியா் ம.பிரபு, செயற்பொறியாளா் (கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம்) வசந்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.