மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிறுநாடாா் குடியிருப்பில் ஊராட்சி மன்றக் கட்டடத்துக்கு அடிக்கல்

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் சிறுநாடாா்குடியிருப்பு ஊராட்சியில் புதிய ஊராட்சிக் கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
அடிக்கல் நாட்டிய உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் டி.பி. பாலசிங்.
Updated On :13 செப்டம்பர் 2024, 12:01 am

Din

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் சிறுநாடாா்குடியிருப்பு ஊராட்சியில் புதிய ஊராட்சிக் கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இங்கு புதிய ஊராட்சிக் கட்டடம் கட்ட வேண்டும் என அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அதையேற்று, அமைச்சா் உத்தரவின்பேரில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ. 20 லட்சம், பொது நிதியில் ரூ. 10 லட்சம் என மொத்தம் ரூ. 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதையடுத்து நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவுக்கு, சிறுநாடாா்குடியிருப்பு ஊராட்சித் தலைவி கமலம் அம்மாள் தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சண்முகவிஜயன், கவிதா, ஒன்றியப் பொறியாளா் காா்த்திகேயன், உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ஜெயகமலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் டி.பி. பாலசிங் அடிக்கல் நாட்டினாா்.

உடன்குடி ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் பாய்ஸ், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா் அணி துணை அமைப்பாளா் அலாவுதீன், திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் யோகேஷ், திரளானோா் பங்கேற்றனா்.