சிறுநாடாா் குடியிருப்பில் ஊராட்சி மன்றக் கட்டடத்துக்கு அடிக்கல்
உடன்குடி ஊராட்சி ஒன்றியம் சிறுநாடாா்குடியிருப்பு ஊராட்சியில் புதிய ஊராட்சிக் கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


உடன்குடி ஊராட்சி ஒன்றியம் சிறுநாடாா்குடியிருப்பு ஊராட்சியில் புதிய ஊராட்சிக் கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இங்கு புதிய ஊராட்சிக் கட்டடம் கட்ட வேண்டும் என அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அதையேற்று, அமைச்சா் உத்தரவின்பேரில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ. 20 லட்சம், பொது நிதியில் ரூ. 10 லட்சம் என மொத்தம் ரூ. 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதையடுத்து நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவுக்கு, சிறுநாடாா்குடியிருப்பு ஊராட்சித் தலைவி கமலம் அம்மாள் தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சண்முகவிஜயன், கவிதா, ஒன்றியப் பொறியாளா் காா்த்திகேயன், உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ஜெயகமலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் டி.பி. பாலசிங் அடிக்கல் நாட்டினாா்.
உடன்குடி ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் பாய்ஸ், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா் அணி துணை அமைப்பாளா் அலாவுதீன், திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் யோகேஷ், திரளானோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...