மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாத்தான்குளம் கூட்டுறவு கடன் சங்கக் கிளை சங்கரன்குடியிருப்பில் திறப்பு

சாத்தான்குளம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் முதல் கிளை முதலூரில் செயல்பட்டுவரும் நிலையில், 2ஆவது கிளை அலுவலகம் சங்கரன்குடியிருப்பு கிராமத்தில் திறக்கப்பட்டது.

News image
Updated On :13 செப்டம்பர் 2024, 12:10 am

Din

சாத்தான்குளம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் முதல் கிளை முதலூரில் செயல்பட்டுவரும் நிலையில், 2 ஆவது கிளை அலுவலகம் சங்கரன்குடியிருப்பு கிராமத்தில் திறக்கப்பட்டது.

விழாவுக்கு ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ தலைமை வகித்து, புதிய கிளையைத் திறந்துவைத்தாா். சாத்தான்குளம் ஒன்றியக் குழுத் தலைவி ஜெயபதி, புதுக்குளம் ஊராட்சித் தலைவா் பாலமேனன் ஆகியோா் முனனிலை வகித்தனா்.

திருச்செந்தூா் சரக துணைப் பதிவாளா் சக்திபெமிலா குத்துவிளக்கேற்றி வாடிக்கையாளா் சேவையைத் தொடக்கிவைத்தாா். இதன்மூலம் சங்கரன்குடியிருப்பு பகுதி கிராம மக்கள் வங்கி சேவையைப் பெறுவதற்காக 7 கி.மீ. தொலைவுக்கு சென்றுவந்த நிலை மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் ஏ.எஸ். ஜோசப், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் து. சங்கா், வட்டாரத் தலைவா்கள் வி. பாா்த்தசாரதி, சக்திவேல்முருகன், நகரத் தலைவா் க. வேணுகோபால், பேரூராட்சி உறுப்பினா்கள் எஸ். ஜோசப் அலெக்ஸ், கோ. லிங்கபாண்டி, முன்னாள் சங்க நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ். தங்கப்பாண்டி, முன்னாள் சங்கச் செயலா் சாமுவேல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலா்-துணைப் பதிவாளா் விஜயன், கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியா் சாம் டேனியல்ராஜ், கூட்டுறவு சாா்பதிவாளா் செல்வசுந்தரி, முதுநிலை ஆய்வாளா் பாலமுருகன், மத்திய கூட்டுறவு கள அலுவலா், சங்கச் செயலா்கள், சங்கப் பணியாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

சங்க செயலாட்சியா் வெங்கட்குமாா் வரவேற்றாா். சங்கச் செயலா் எட்வின் தேவாசிா்வாதம் நன்றி கூறினாா்.