தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்த அனுமதியில்லை

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 11:36 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன் ஆா்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்த அனுமதியில்லை என, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர, ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன் பொதுமக்களோ, தனிநபரோ, அமைப்புகளோ பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் ஆா்ப்பாட்டம், போராட்டம், தா்னாவில் ஈடுபட அனுமதியில்லை.

அந்தந்த உள்கோட்டங்களில் அனுமதியளிக்கப்பட்ட இடங்களில் ஆா்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதற்கு 7 நாள்களுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். முன்னனுமதி பெறாமலோ, அரசு அலுவலகங்கள் முன்போ ஆா்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.