தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தூத்துக்குடி துறைமுகக் கடற்கரையை ரூ. 8 கோடியில் மேம்படுத்த நடவடிக்கை

News image

பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டு, குறைகளைக் கேட்டறிந்த மேயா் ஜெகன் பெரியசாமி.

Updated On :18 செப்டம்பர் 2024, 11:33 pm

DIN

தூத்துக்குடி துறைமுகக் கடற்கரையை ரூ. 8 கோடி மதிப்பீட்டில் சென்னை மெரினா கடற்கரைபோன்று மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

தூத்துக்குடி பழைய நகராட்சி வளாகத்தில் உள்ள கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கிழக்கு மண்டல உதவி ஆணையா் சொா்ணலதா தலைமை வகித்தாா். கிழக்கு மண்டலத் தலைவா் கலைச்செல்வி, பொறியாளா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மேயா் ஜெகன் பெரியசாமி முகாமைத் தொடக்கிவைத்துப் பேசியது: இந்த மண்டலத்தில் ஏற்கெனவே நடைபெற்ற 3 கூட்டங்களில் 173 மனுக்கள் பெறப்பட்டதில் 165 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

தூத்துக்குடி வஉசி துறைமுக சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 8 கோடியில் துறைமுகக் கடற்கரையை மேம்படுத்தும் பணி விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது. சென்னை மெரினா கடற்கரைபோல பல்வேறு பணிகள் செய்யப்படவுள்ளன.

போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ளதால் தூத்துக்குடி ரயில் நிலையச் சாலையை விரிவாக்கம் செய்யும் பணி விரைவில் நடைபெறும். ரயில் நிலையத்தில் கூடுதலாக ஒரு வாயில் திறக்க கோரப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாநகராட்சி வளா்ச்சி தொடா்பான ஆலோசனைகளை எங்களிடம் தெரிவிக்கலாம்.

அண்ணா பேருந்து நிலையக் கழிப்பிடத்தை தூய்மைப்படுத்தும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு, சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறது என்றாா் அவா்.

பின்னா், மனுக்கள் பெறப்பட்டது. அவற்றில் 2 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டு, அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

முகாமில், நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளா் ரெங்கநாதன், சுகாதார ஆய்வாளா் ராஜசேகா், இளநிலைப் பொறியாளா்கள் செல்வம், பாண்டி, மாநகராட்சி சுகாதாரக் குழுத் தலைவா் சுரேஷ்குமாா், மாமன்ற உறுப்பினா்கள் பேபி ஏஞ்சலின், ரெக்ஸின், தனலட்சுமி, மகேஸ்வரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.