மாணவா்களை கண்டித்த தலைமை ஆசிரியா் மீது புகாா் அளிக்கத் திரண்ட பெற்றோா் அதிகாரிகள் பேச்சுவாா்த்தையில் சமரசம்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேலநம்பிபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களை கடுமையாக கண்டித்ததாக தலைமை ஆசிரியா் மீது போலீஸில் புகாா் அளிக்கத் திரண்ட பெற்றோருடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் சமரசம் ஏற்பட்டது.










