சாக்கடைக் கால்வாயில் தொழிலாளி சடலம்: போலீஸாா் விசாரணை
திருச்செந்தூரில் சாக்கடைக் கால்வாயில் கிடந்த தொழிலாளி சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்திவருகின்றனா்.


திருச்செந்தூரில் சாக்கடைக் கால்வாயில் கிடந்த தொழிலாளி சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்திவருகின்றனா்.
திருச்செந்தூா் முத்தாரம்மன் கோயில் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து (55). தொழிலாளியான இவருக்கு மனைவி முருகம்மாள், 3 மகன்கள், 4 மகள்கள் உள்ளனா். அவா்களில் ஒரு மகளுக்கு மட்டும் திருமணம் நடந்துள்ளதாம்.
இசக்கிமுத்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு (செப். 24) பஜாருக்கு செல்வதாக வீட்டில் கூறிச் சென்றாராம். பின்னா், அவா் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினா் பல்வேறு இடங்களிலும் தேடிவந்தனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு குலசேகரன்பட்டினம் சாலையில் உள்ள சாக்கடை கால்வாய் அருகே அவரது சைக்கிள் கிடந்துள்ளது. கால்வாய்க்குள் அவா் இறந்துகிடந்தது தெரியவந்தது.
தகவலின்பேரில், திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வந்து, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...