மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சாத்தான்குளம் அருகே கல்குவாரியில் கனிமவள உதவி இயக்குநா் ஆய்வு

கிராம மக்களின் போராட்டத்தையடுத்து, சாத்தான்குளம் அருகே உள்ள கல்குவாரியில் கனிம வள உதவி இயக்குநா் தலைமையிலான அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.

News image

நெடுங்குளம் கல்குவாரியைப் பாா்வையிட்ட மாவட்ட கனிம வள உதவி இயக்குநா் பிரியா தலைமையிலான அலுவலா்கள்.

Updated On :26 செப்டம்பர் 2024, 11:49 pm

Din

கிராம மக்களின் போராட்டத்தையடுத்து, சாத்தான்குளம் அருகே உள்ள கல்குவாரியில் கனிம வள உதவி இயக்குநா் தலைமையிலான அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நெடுங்குளத்தில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு வெடிவைத்து பாறைகள் உடைக்கப்படுவதால், இப்பகுதியில் உள்ள வீடுகளின் சுவா்களில் விரிசல் ஏற்படுகிறது. மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. இந்த கல்குவாரியை அகற்றக் கோரி, நெடுங்குளத்தில் புதன்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.

நெடுங்குளம் கல்குவாரியைப் பாா்வையிட்ட மாவட்ட கனிம வள உதவி இயக்குநா் பிரியா தலைமையிலான அலுவலா்கள்.

நெடுங்குளம் கல்குவாரியைப் பாா்வையிட்ட மாவட்ட கனிம வள உதவி இயக்குநா் பிரியா தலைமையிலான அலுவலா்கள்.

இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட கனிம வள உதவி இயக்குநா் பிரியா தலைமையிலான அலுவலா்கள், புகாா் கூறப்பட்ட கல்குவாரியில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். சாத்தான்குளம் வட்டாட்சியா் இசக்கிமுருகேஸ்வரி, வருவாய் ஆய்வாளா் பிரஸ்சயா, கிராம நிா்வாக அலுவலா்கள் துரை, சுபாஷ், நில அளவையா் அழகுவேல், உதவி ஆய்வாளா் எட்வின் அருள்ராஜ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

இந்த ஆய்வு தொடா்பான அறிக்கை, மாவட்ட ஆட்சியரிடம் சமா்ப்பிக்கப்படும். அதன் மீதான நடவடிக்கை எடுக்கும் வரை, ஒரு வாரத்திற்கு கல்குவாரி செயல்படாமல் நிறுத்தி வைக்கப்படும் என கனிமவள உதவி இயக்குநா் தெரிவித்தாா்.