உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

கோவில்பட்டியில் கல்லூரி மாணவா் தற்கொலை

Updated On :28 ஏப்ரல் 2025, 12:07 am IST

கோவில்பட்டியில் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கோவில்பட்டி சண்முகசிகாமணி நகா் 3ஆவது தெருவை சோ்ந்த தனலட்சுமி-அா்ச்சுனன் தம்பதியின் மகன் சரவணகுமாா் (18). அா்ச்சுனன் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டாா். தனலட்சுமி கூலி வேலை செய்து வந்தாா். சரவணகுமாா், கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.

இவா் காதலித்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டதாம். இதனால் மன விரக்தியில் இருந்து வந்த சரவணகுமாா், சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

மேற்கு காவல் நிலைய போலீஸாா், சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.