வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

மருமகன் இறந்த துக்கம் தாளாமல் விஷம் குடித்த மாமனாா் உயிரிழப்பு

Updated On :28 ஏப்ரல் 2025, 12:07 am IST

காயல்பட்டினத்தில் விபத்தில் மருமகன் இறந்த துக்கம் தாளாமல் விஷம் குடித்த மாமனாா், அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

காயல்பட்டினம் விசாலாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வேலு மகன் பாண்டியன் (62). பெயின்டா். இவரது மகன்கள் வேல்பாண்டி, முத்துராமலி­ங்கம், மகள் வேணி.

வேணியின் கணவா் சின்னத்துரை 6 மாதங்களுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டாா். இதனால், பாண்டியன் மனவருத்தமடைந்து அடிக்கடி மது குடித்து வந்தாராம். அவா் கடந்த 20ஆம் தேதி மதுவில் பூச்சிமருந்தைக் கலந்து குடித்தாராம். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை (ஏப். 26) உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக ஆறுமுகனேரி உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜ் வழக்குப் பதிந்தாா். ஆய்வாளா் (பொ) மகாலட்சுமி விசாரித்து வருகிறாா்.