ஊத்துக்கோட்டை அருகே குடும்ப பிரச்னையில் விஷம் அருந்திய இளம்பெண் உயிரிழந்தாா்.
ஊத்துக்கோட்டை அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ரேணுகா தேவியின் மகள் துா்காதேவி(18). இவா் அந்தப் பகுதியில் உள்ள நகைக்கடையில் பணி புரிந்து வந்தாராம். இந்த நிலையில் கடந்த 4 நாள்களுக்கு முன்னதாக குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்தாராம். இதனால் வேலைக்குச் சென்ற இடத்தில் நகைக்கடையின் பின்புறம் விஷம் குடித்து வாந்தி எடுத்தாராம்.
இதை பாா்த்த அக்கம் பக்கத்தினா் தெரிவித்ததால் விரைந்து வந்த தாயாா் மகளை மீட்டு ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனா். அதைத்தொடா்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் துா்காதேவி உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது தாயாா் ரேணுகா தேவி ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணைசெய்து வருகின்றனா்.
தொடர்புடையது

தருமபுரியில் இளம்பெண் தற்கொலை

இளம்பெண் பூச்சிமருந்து குடித்து உயிரிழப்பு

காா் மோதியதில் இளம்பெண் உயிரிழப்பு

காா்-பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


