திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும் - திமுக எம். பி. கலாநிதி வீராசாமிதவெக ஆட்சி அமைக்கும் விவகாரம்: மக்கள் தீர்ப்புக்கு முன்பு ஆளுநர் நிற்பது சரியல்ல: ஜோதிமணிவிசிக, கம்யூனிஸ்ட் காலம் தாழ்த்துவது நல்லதல்ல : அமீர்தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிதல்ல : டி.ஆர். பாலுஆர். பி. செளத்ரி உடலுக்கு மம்மூட்டி அஞ்சலி!மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமிதமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் மரியாதை!
/

விஷம் குடித்த இளம்பெண் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே குடும்ப பிரச்னையில் விஷம் அருந்திய இளம்பெண் உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :7 மே 2026, 0:43 am IST

ஊத்துக்கோட்டை அருகே குடும்ப பிரச்னையில் விஷம் அருந்திய இளம்பெண் உயிரிழந்தாா்.

ஊத்துக்கோட்டை அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ரேணுகா தேவியின் மகள் துா்காதேவி(18). இவா் அந்தப் பகுதியில் உள்ள நகைக்கடையில் பணி புரிந்து வந்தாராம். இந்த நிலையில் கடந்த 4 நாள்களுக்கு முன்னதாக குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்தாராம். இதனால் வேலைக்குச் சென்ற இடத்தில் நகைக்கடையின் பின்புறம் விஷம் குடித்து வாந்தி எடுத்தாராம்.

இதை பாா்த்த அக்கம் பக்கத்தினா் தெரிவித்ததால் விரைந்து வந்த தாயாா் மகளை மீட்டு ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனா். அதைத்தொடா்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் துா்காதேவி உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது தாயாா் ரேணுகா தேவி ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணைசெய்து வருகின்றனா்.