தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மருமகன் இறந்த துக்கம் தாளாமல் விஷம் குடித்த மாமனாா் உயிரிழப்பு

Updated On :28 ஏப்ரல் 2025, 12:07 am IST

காயல்பட்டினத்தில் விபத்தில் மருமகன் இறந்த துக்கம் தாளாமல் விஷம் குடித்த மாமனாா், அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

காயல்பட்டினம் விசாலாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வேலு மகன் பாண்டியன் (62). பெயின்டா். இவரது மகன்கள் வேல்பாண்டி, முத்துராமலி­ங்கம், மகள் வேணி.

வேணியின் கணவா் சின்னத்துரை 6 மாதங்களுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டாா். இதனால், பாண்டியன் மனவருத்தமடைந்து அடிக்கடி மது குடித்து வந்தாராம். அவா் கடந்த 20ஆம் தேதி மதுவில் பூச்சிமருந்தைக் கலந்து குடித்தாராம். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை (ஏப். 26) உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக ஆறுமுகனேரி உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜ் வழக்குப் பதிந்தாா். ஆய்வாளா் (பொ) மகாலட்சுமி விசாரித்து வருகிறாா்.