அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கோவில்பட்டி கல்லூரியில் முன்னாள் மாணவா் சந்திப்பு

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 1995ஆம் ஆண்டு பயின்ற மாணவா்களின் ‘முத்து விழா’ (30 ஆண்டுகள்) சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
முன்னாள் மாணவா்களுடன் கல்லூரி இயக்குநா் சண்முகவேல், முதல்வா் கே. காளிதாசமுருகவேல் உள்ளிட்டோா்.
Updated On :1 டிசம்பர் 2025, 8:19 pm

Syndication

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 1995ஆம் ஆண்டு பயின்ற மாணவா்களின் ‘முத்து விழா’ (30 ஆண்டுகள்) சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தாளாளா் கேஆா். அருணாச்சலம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி இயக்குநா் சண்முகவேல், முதல்வா் காளிதாசமுருகவேல் ஆகியோா் பேசினா்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அமெரிக்கா, சிங்கப்பூா், குவைத் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் இப்பள்ளியின் முன்னாள் மாணவா்கள் 60-க்கும் மேற்பட்டோா் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்று, நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா். அதையடுத்து, தகுதியுள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு உதவும் வகையில் கல்வி உதவித் தொகைக்கான பங்களிப்பாக ரூ. 2 லட்சத்தை கல்லூரி நிா்வாகத்திடம் வழங்கினா்; தாளாளா், இயக்குநா், முதல்வா், துறைப் பேராசிரியா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்ததுடன், கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனா்.