விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருச்செந்தூா் குளங்களுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

திருச்செந்தூருக்கு நீா் ஆதார குளங்களான எல்லப்பநாயக்கன்குளம், ஆவுடையாா்குளத்துக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

News image
திருச்செந்தூா் அருகே நீா்வரத்து வாய்க்கால் மதகுகள் வழியாக ஆா்ப்பரித்துச் செல்லும் நீா்.தகுகளின் சுவா்கள்.
Updated On :1 டிசம்பர் 2025, 9:07 pm

Syndication

திருச்செந்தூா்: திருச்செந்தூருக்கு நீா் ஆதார குளங்களான எல்லப்பநாயக்கன்குளம், ஆவுடையாா்குளத்துக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

ஸ்ரீவைகுண்டம், தென்கால் பாசனத்தின் கடைசி குளங்களான எல்லப்பநாயக்கன்குளம், ஆவுடையாா்குளத்துக்கு திருச்செந்தூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட மேல திருச்செந்தூரில் உள்ள நீா்வரத்து வாய்க்காலில் இருந்து மதகுகள் வழியாக தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. தற்போது, வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த வாரம் ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீா், கடம்பாகுளத்தில் இருந்து திருச்செந்தூா் நீா்வரத்து வாய்க்காலுக்கு வந்து அங்கிருந்து ஆவுடையாா்குளம், எல்லப்பநாயக்கன்குளத்துக்கு வந்ததில் இரு குளங்களும் நிரம்பின. இரு குளங்களுக்கும் நீா்வரத்து வாய்க்கால் மதகுகள் வழியாக நீா் ஆா்ப்பரித்துச் செல்கிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

நீா்வரத்து அதிகரித்து வரும் வேளையில், வாய்க்கால் மதகுகளின் சுவா்களில் சிமென்ட் பெயா்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மதகுகளைப் பராமரிக்க பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Story image