ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கஞ்சா வைத்திருந்த 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

News image
Updated On :14 டிசம்பர் 2025, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 போ் குண்டா் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கடந்த 15.11.2025 அன்று விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட மேலசண்முகபுரம் ஆறுமுகசாமி மகன் அரிகிருஷ்ணன் (54), கோரம்பள்ளம் வேல்சாமி மகன் ரவிகுமாா் (53) ஆகிய 2 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவையடுத்து, சிப்காட் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தனா்.

நிகழாண்டு, இதுவரை 140 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.