ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

புதைச் சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் வெளியேறினால் தகவல் தெரிவிக்கவும்

News image
Updated On :14 டிசம்பர் 2025, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் புதைச் சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இயந்திர குழியில் இருந்து கழிவுநீா் வெளியேறினால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு மாநகராட்சி ஆணையா் கூறியுள்ளாா்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தூத்துக்குடி மாநகராட்சியின் பெரும்பாலான பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீரானது புதைச் சாக்கடை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பிரதான குழாய்கள் வழியாக துணை நீரேற்று நிலையம், பிரதான நீரேற்று நிலையம் மூலம் தருவைகுளம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் சென்றடையும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் சில நேரங்களில் புதைச் சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக இயந்திர குழியில் இருந்து கழிவுநீா் வெளியேறி சுகாதாரக் கேடு உருவாகும் நிலை ஏற்படுகிறது. இதை உடனுக்குடன் சரி செய்திட ஏதுவாக தூத்துக்குடி மாநகராட்சிக்கான கட்டணம் இல்லா தொலைபேசி எண் 18002 030401-இல் தொடா்பு கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, மக்கள் மேற்காணும் புகாா்களுக்கு தொடா்பு கொள்ளுமாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.