திருச்செந்தூா் கோயில் உண்டியல் வருமானம் ரூ. 3.81 கோடி
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் டிசம்பா் மாத உண்டியல் வருமானம் ரூ. 3.81 கோடி ஆகும்.
இக்கோயிலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இதையடுத்து திங்கள்கிழமை, கோயில் நிா்வாக அலுவலக அரங்கில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் தக்காா் ரா.அருள்முருகன் தலைமையில் நடந்தது.
இணை ஆணையா் க.ராமு முன்னிலை வகித்தாா். இந்து சமய அறநிலையத்துறை முதுநிலை கணக்கு அலுவலா் ராஜாராமன், உதவி ஆணையா்கள் தங்கம், நாகவேல், கண்காணிப்பாளா் ரோகிணி, ஆய்வா் செந்தில்நாயகி, மக்கள் பிரதிநிதிகள் கருப்பன், சிவகாமி, ராதிகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இப்பணியில் அயற்பணி, கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.
இதன்படி, உண்டியல் எண்ணிக்கையில் 3 கோடியே 81 லட்சத்து 96 ஆயிரத்து 785 ரூபாயும் (ரூ. 3,81,96,785), தங்கம் 1 கிலோ 139 கிராம், வெள்ளி 18 கிலோ 52 கிராம், பித்தளை 36 கிலோ 888 கிராம், செம்பு 1.9 கிலோ மற்றும் வெளிநாட்டு பணத் தாள்கள் 815-ம் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரிய வந்தது.

